Thursday, June 10, 2010

ஜாதி

லிப்ஸ்டிக்கும் புடவைக்கும்
நாலு செட் நகைக்கும்
மாலையில் மல்லியும்
தினமொரு திரைப்படமும்
உன் கனவல்ல - அறிவேன்!

நீ வேறு ஜாதி!
நான் அதையுணர்ந்த ஜாதி!
தன்மானப் பெண்ணே தாங்குவேன் வா!

Saturday, June 5, 2010

காவியம்

காதலர் தோற்று
காதல் ஜெயிக்கும்
காவியக் காதலில் எனக்கு
சம்மதமில்லை!
நாம் காவியமாதல் வேண்டாம்!
இங்கே வாழ்க்கை வசீகரமானது!

Thursday, June 3, 2010

முட்டாள்

காதலிப்பவன் முட்டாள்
என்றான் நண்பன்!

உன்னை நினைத்தேன்!

மீண்டும் நினைத்தேன்!

மறுபடி நினைத்தேன்!

தீர்மானித்தேன்!
நான் அறிவாளியாக
மாற அவசியமில்லை என்று!

Tuesday, June 1, 2010

நோய்

கதிர்வீச்சை விடவும்
அபாயகரமானது
உன் கண் வீச்சு!

ஏழு பிறவிக்கும்
ஏற்பட்டே தீரும்
காதல் நோய்!!

Thursday, May 27, 2010

உண்மை

உண்மையான
உண்மையை சொல்லவா?

சந்திக்கும்போதைவிட
சந்திக்காதபோதுதான்
உன்னை அதிகம் ரசிக்கிறேன்!

நகைப்பு

நேற்று என் கனவில்
நகைத்தது ஏன்?

வாகனம் எடுத்து வந்ததில்
பாவம் ஒரு கோழி

இனி நகைக்காதே
முட்டைகள் தேவை

அனுமதி

மூங்கில் காட்டில் காற்றின் தழுவல்
எவர் உத்தரவில்!

அங்கே புல்லாங்குழலின் கீதம் பிறந்தது
யாரின் கண்ணசைவில்!

என் இதயம் நழுவி உன்னில் விழுந்ததும்
அவரின் அனுமதியில்!

சப்தம்

அருவிகள் கொட்டட்டும்,
இடிகள் இடிக்கட்டும்,
குண்டுகள் வெடிக்கட்டும்!

எனக்கு மட்டும் கேட்கும்
உன் முணுகல் சப்தம்,
உன் பெருமூச்சு கூட
என்னுள் மனப்பாடம்

அறிவிப்பு

பெண்ணை வர்ணித்து கவிதை
எழுதின மற்றும் எழுதும்
அத்தனை பேருக்கும்
ஓர் இனிய அறிவிப்பு
விடுத்து உள்ளேன்,
"உங்கள் கற்பனைக் காரிகையைக்
காண ஆவலா?
என்னை அணுகவும்.
என்னவளைக் காட்டுகிறேன்"
என்று

Wednesday, May 26, 2010

மெளனம்

சிலருக்கு விழிகளே ஆயுதம்
சிலருக்கு சிரிப்பே ஆயுதம்
இன்னும் சிலர் இருக்கிறார்கள்
அவர்களுக்கு மெளனமே ஆயுதம்

வீசிப் பார்த்த போதும்
பேசிப் பார்த்த போதும்
விழாதவனை மெளனமாக கொல்வது
அற்புதமான கலை!

வெறுப்பு

என்னை எங்கே பார்த்தாலும்
முகத்தை திருப்பிக் கொள்!

என் பெயரை யார் உச்சரித்தாலும்
காதுகளை பொத்திகொள்!

எந்த கடிதத்ததை நான் கொடுத்தாலும்
படிக்காமல் கிழித்து விடு!

நான் கனவில் வந்தால்
தூங்காமல் விழித்திரு!

ஏன் காரணம் புரியவில்லையா?

அடிப்பததைத்தான் அணைக்க முடியும்!!
வெறுப்பத்தைத்தான் விரும்ப முடியும்!!

Tuesday, May 25, 2010

கடவுளும் காதலும்

கடவுளும் காதலும்
ஒன்றுதானோ
புலப்படாமல்
புலம்ப வைப்பதால்!

வாழ்க்கை

நான் ஒரு ரோஜாச் செடி!

இன்ப பூக்கள் பூத்தாலும்
துன்ப முட்கள்
நிரந்தரமாய் என்னில் இருக்கிறது!

புரிகிறது இதுதான்
வாழ்க்கை!!

முடிவு

போதுமடி பெண்ணே!
எனக்குள் நானே வெடித்து,
உடைந்து,
கரைந்து,
வழிந்தது போதும்!

இனியாவது உன்
முகமூடியை கிழித்து
முகவரியை வெளிப்படுத்து!

"சரி" என்றில்லை
"முடியாது" என்றாவது
முடிவாக முடிவை வெளிப்படுத்து!

கோலம்

என் இதய வாசலில்
புள்ளி வைத்துவிட்டு

இன்னொருவன் இல்ல வாசலில்
கோலம் போட்டு விட்டாயே?

Monday, May 24, 2010

ரசிகன்

ரசிகனைப் போல
நெருங்கி வருகிறேன்,

ஏன் விமர்சகனைப் போல
விலகி நிற்கிறாய்!!

கண்

காதலுக்கு கண்னில்லை
உண்மைதான்

நான் அவளை காதலித்தும்
அவள் என்னை காதலிக்கவில்லை

Sunday, May 23, 2010

தாடி

தாயின் கருவினில் வந்தேன்
பூமியில் பிறப்பதற்கு

பாட சாலைக்கு சென்றேன்
பாடம் படிப்பதற்கு

கல்லூரிக்கு வந்தேன்
நான் காதலிப்பதற்கு

நான் காதலித்தேன்
தாடி வளர்ப்பதற்கா?

காதலில் தோல்வி

கம்பன் காலத்திலிருந்தே
காதலில் தோல்வி என்பது
செய்தியாயிருந்தது
இன்று
எனக்குள் நிகழ்ந்தபோது
சுடுகிறது!

பேனா

சோகக் கவிதை வடித்தே
கரைக்கின்றேன் நாளும்!

பேனா கூட
சில நேரங்களில்
உன்னை மாதிரியே
ஏமாற்றி விடுகிறது!

அழுகுணீ சித்தர்

அழுகுணீ சித்தர் என்றே என்னை
அடையாளம் காட்டினார்கள்

அழ வைத்தவளே!
உன் அழகைத்தான்
இன்னமும் வர்ணிக்கிறார்கள்!!

எட்டுகால் பூச்சி

நான் எட்டுகால் பூச்சிதான்
கட்டிய வலையில்
சிக்கிக் கொண்டதை
யாரிடம்
புலம்பி குமுற!

விஷம்

காதல் சாவகாச விஷம் என்பது
சரியாகத்தான் இருக்கிறது,

ஆனால் என்னை மட்டும்
ஏன் அது சாகடிக்கிறது!

Saturday, May 22, 2010

அழுகை

அழுதால் கண்கள் கரையுமெனில்
இந்நேரத்திற்கு இங்கே
என்னில் எதுவுமேயிருக்காது!

கடன்

என் உள்ளங்கையில்
எல்லாம் உண்டென கர்வப்பட
வைத்து விட்டு
கையை கடனாக
கேட்கிறாயே!

பல்கலைக்கழகம்

உன்னைப் பார்த்து
காதலை கற்றுக் கொண்டேன்

உன் அழகைப் பார்த்து
ஆசையை கற்றுக் கொண்டேன்

உன் சிரிப்பைப் பார்த்து
ஏக்கத்தை கற்றுக் கொண்டேன்

மொத்தத்தில் பெண்ணே!
நீ ஒரு பல்கலைக்கழகம்!!

Friday, May 21, 2010

மேகம்

வெறுமனே மின்னலை மட்டும்
வீசி எறிந்து விட்டு,
பொழிய மறுத்து
போகும் மேகமாய்!

பார்வைகளை மட்டுமே
வீசிவிட்டு நீ போகிறாய்
இங்கே வறண்ட நிலமாக
நான்!!

ஆர்ட் ஃப்லிம்

அவளும்
ஒரு ஆர்ட் ஃப்லிம் தான்

எளிதில் புரிந்து
கொள்ள முடியவில்லை

கொலுசு சத்தம்

மாலைத் தென்றல், மழையின் சாரல், மயிலிரகின் வருடல்
- இவை தருகின்ற சிலிர்ப்பைக்
காட்டிலும் நூறு மடங்கு அதிகம்
என்னை சிலிர்க்க வைப்பது
உன் கொலுசு சத்தம்

Thursday, May 20, 2010

அழுகை

அழுகை எனக்கு பிடிக்கும்
ஆறுதல் சொல்ல நீ இருந்தால்

கோபம்

கோபம் எனக்கு பிடிக்கும்
கோபிப்பது நீ என்றால்

தோல்வி

தோல்வி எனக்கு பிடிக்கும்
தோற்பது உன்னிடம் என்றால்

அன்பு

எல்லோரிடமும் அன்பை
காட்டி ஏமாந்து விடாதே!

யாரிடமும் அன்பை
காட்டி ஏமாற்றி விடாதே!!

Monday, April 26, 2010

சொல்

"என்னை மறந்து விடு" என்று சொல்வதைவிட
"இறந்துவிடு" என சொல்

ஏனெனில்,
உன்னை மறப்பதை விட இறப்பது சுகம்

Saturday, April 24, 2010

சிக்கல்

நீ உந்தன் கூந்தலைத்தான்
கோதினாய் - ஆனால்

என் இதயத்தில் அல்லவா
சிக்கல் விழுந்தது

இலக்கியம்

அன்று உன் வார்த்தைகளுக்கு கூட
அர்த்தம் புரியாது

இன்று உன் மௌனம் கூட
இலக்கியம் தான்

Friday, April 16, 2010

அன்பு

அன்பு என்ற சொல்லிற்கு
ஆதரவாய் எத்தனையோ சொற்கள்

ஒன்று பாசமாம், மற்றொன்று நேசமாம்,
இன்னொன்று காதலாம்

இப்படி வகைப்படுத்தியவர் வாழ்ந்தபோது
நீயும் வாழ்ந்திருந்தால்
உன்னையல்லவா உதாரணமாக்கி
இருப்பார்கள்

நல்லவேளை என் காலத்தில் நீ பிறந்தாய்
இல்லையென்றால்
என்னிதய சிம்மாசனத்தில்
ஏற்றமுடியாமல்
ஏட்டில் மட்டுமல்லவா பார்த்திருப்பேன்!

Wednesday, April 14, 2010

சிரிப்பு

உதட்டில் சிரிப்பது
ஊருக்கு தெரியும்!

உள்ளத்தில் அழுவது
யாருக்கு தெரியும்?

மௌனம்

என்னை கொல்ல
வீரியமான விஷம் வேண்டாம்
கூர்மையான வாள் வேண்டாம்

உன் சில நிமிட மௌனம் ஒன்றே போதும்
மறு ஜென்மம் வேண்டாமென்று
நான் இறக்க...

பிடித்தல்

என்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது...

அவளையும் எல்லோருக்கும்
பிடிக்கிறது...

எங்களைத்தான் யாருக்கும்
பிடிக்கவில்லை!!!